Thursday 28 June 2018

பங்களாதேஷிற்கு மின்சாரம் - ஆதானி ஜார்கண்ட் ஆலை


விதிமுறைகள் மாற்றம் குறித்து, நேற்று போட்ட பதிவுக்கு இலவச இணைப்பாக இன்னொரு பதிவு.

பங்களாதேஷின் மின்சார தேவைக்காக மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதானி குழுமம் அமைக்க பார்க்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது.  

ஜார்கண்ட் மாநில விதிமுறைகளின் படி ஜார்கண்ட் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 25% மின்சாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கே குறைந்த விலையில் விற்கவேண்டும்.

இதற்கான விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பொன்றை காரணமாக காட்டி மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த மாறிய விதிமுறைகளின் பலன்கள் வேறு எந்த நிறுவனத்திற்கும் கிடைக்காது... ஆதானிக்கு மட்டும்தான் கிடைக்கும். இதை CAG கண்டித்துள்ளார். கண்டிச்சுட்டு போயிக்கோ என்று டீலில் விட்டுவிட்டார்கள்.

இந்த மின்உற்பத்தி நிலையத்தை அமைக்க 13500 கோடி ரூபாய்கள் தேவைப்படுமாம். ஏற்கனவே ஆதானி பவர், தன்னுடைய ஈக்வடி போல 16 மடங்கிற்கு கடன் வாங்கியிருக்கிறது. இந்த முறை எந்த வங்கியோ?

இந்த விதிமுறை மாற்றங்கள் ஒருபுறமிருந்தாலும், பங்களாதேஷிற்கும் இந்த டீலில் ஆதாயமில்லை என்று சொல்கிறார்கள். இன்னும் கேட்டால் பங்களாதேஷுக்கு மின்சார விலை நிர்ணயிக்கும் கூட்டத்தை அவசர அவசரமாக, முக்கிய அதிகாரிகள் கூட இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்கள். திட்டமிட்ட தேதிக்கு முன்கூட்டியே ஏன் அவசர மீட்டிங் நடத்தப்பட்டது...? காரணம் தெரியாது.

இந்த ஆலைக்கான கரி எங்கிருந்து வரும் என்பதும் புரியவில்லை... ஆஸ்திரேலியாவிலிருந்து கரி இறக்குமதி செய்து இந்த ஆலைக்கு உற்பத்தி செய்யலாம் என்பது திட்டம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆதானிக்கு இருக்கும் எதிர்ப்பையும், திட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதையும் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். (https://perungadal.blogspot.com/2017/12/carmichael-coal-mine.html)

முகத்திலே கரியை பூசினாலும், ஆதானியின் ஆஸ்திரேலிய கனவுகள்  இன்னும் முடியவில்லை போல...!

No comments:

Post a Comment