Tuesday 12 June 2018

ONGC மொட்டை


ONGC – இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 78% பங்குகள் மத்திய அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் வசம் உள்ளது. மிச்ச பங்குகள் பொதுமக்களிடம், Institutional investors- இடமும் உள்ளது.

ONGC- ன் பிஸினஸிற்கு கையிலே நிறைய பணம் வைத்திருப்பது அவசியம். சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13000 கோடி ரூபாய் பணம் வைத்திருந்த இந்த நிறுவனத்திடம் இப்போது வெறும் 1000 கோடி ரூபாய்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, ஏகப்பட்ட கடனும் அதன் தலையில் விடிந்திருக்கிறது. (படத்தை பார்க்கவும்)



எப்படி நடந்தது இந்த மாற்றம்? எல்லாம் நம் பிரதமரின் கைவண்ணம்தான். Hindustan Petoleum Corporation –  ல் தனக்கு இருக்கும் 51% பங்குகளை அரசு ONGC-க்கு கட்டாயப்படுத்தி விற்றது. (பங்கின் சந்தைவிலைக்கு 14% அதிகமான விலை வைக்கப்பட்டது). ONGC- க்கு இதனால் சில சாதகங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இது one sided deal-தான்.

Price Rise and Fall from 2014



அது தவிர வழக்கத்திற்கு மாறாக 8500 கோடி ரூபாய்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கப்பட்டது. மொத்தமாக 42600 கோடி ரூபாய் ONGC-யிடமிருந்து மத்திய அரசுக்கு சென்றுள்ளது. ONGC கடன் வாங்காமல் வேறென்ன செய்யும்?

ONGC முதலீடு செய்யவேண்டிய திட்டங்கள் 86000 கோடி ரூபாய்க்கு அடுத்தடுத்து காத்திருக்கின்றன. கண்டிப்பாக ONGC- க்கு மேலும் கடன் கிடைக்கும். ஆனால், மத்திய அரசு ONGC- யை மொட்டை அடித்ததென்னவோ உண்மை.

இப்படி ONGC – யை மோடி அரசு நிர்பந்திப்பது முதல்முறையல்ல. 2016ல் குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமான GSPC-யை ONGC வாங்கியது. அதன் பின்னால் 20000 கோடி ரூபாய் ஊழல் என்று பேசி கொள்கிறார்கள். ஊழலை மறைப்பதற்காக, ONGC GSPC-யை வாங்குமாறு நிர்பந்திக்கப்பட்டது. (GSPC ஊழல் தனிக்கதை… முடிந்தால் பதிவிடுகிறேன். காங்கிரஸிற்கு பாஜக எந்த விதத்திலும் சளைத்தது அல்ல)  

பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல…! இவ்வளவு பணமும் எங்கே போகிறது…?

No comments:

Post a Comment