Sunday 5 November 2017

Shell Companies


சமீபத்தில் கிட்டத்தட்ட 224000 ஷெல் கம்பெனிகள் அரசால் நீக்கம் செய்யப்பட்டன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அந்த கம்பெனிகளின் டைரக்டர்கள் இனி எந்த கம்பெனியிலும் டைரக்டராக செயல்பட கூடாது என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அது என்ன ஷெல் கம்பெனி என்றால் - ஒரு பிஸினஸும் செய்யாது, சில பொருளாதார குற்றங்களை செய்யவும், வரி ஏய்ப்பு செய்யவும் உருவாக்கப்பட்ட டுபாக்கூர் கம்பெனிகள்.
இப்போது விஷயம் என்னவென்றால் அந்த டுபாக்கூர் கம்பெனிகளில் 35000 கம்பெனிகள், பணமதிப்பிழப்பிற்கு முன்னாலும் பின்னாலும் கிட்டத்தட்ட 17000 கோடி ரூபாயை வங்கியில் போட்டு எடுத்துள்ளன. அதிலும் ஒரு கம்பெனி மட்டும் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயை போட்டு எடுத்துள்ளது.
பணமதிப்பிழப்பினால் ஒரு நன்மையும் இல்லை என்ற புலம்பலை நிறுத்த, ஒரு பத்து ஃபிராடு பசங்களையாவது பிடித்து உள்ளே போடவும்.

No comments:

Post a Comment