Tuesday 31 July 2018

NSE and Sharemarket reforms


90-களில் நரசிம்மராவும், மன்மோகனும் சேர்ந்து செய்த பல பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று, பங்கு சந்தையை நவீனமயமாக்கியதே.

24 ஆண்டுகளுக்கு முன்பு (23.7.94), NSE  ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை BSEதான் நாட்டிலேயே பெரிய பங்குசந்தை. உண்மையிலேயே சந்தைக்கடை போல கூவிக்கூவித்தான் பங்குகளை வாங்க/ விற்கவேண்டும். பேப்பரில்தான் பங்கு சர்டிபிகேட்டுகள். Delivery default-கள் அதிகம்.

NSE அவற்றையெல்லாம் மாற்றியது. முதன்முறையாக Screen Based Trading அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டரில் விலையை போட்டால் உங்கள் ஆர்டரோடு பொருந்தும் இன்னொரு ஆர்டரை கம்ப்யூட்டர் மேட்ச் செய்தது.

மன்மோஹன் NSE-ஐ தொடங்கிவைக்கிறார்
ஆரம்பத்தில் NSE சந்தையை ஒருத்தரும் மதிக்கவில்லை. NSE-ல் வர்த்தகம் ஒரு நாளைக்கு 10 கோடிதான். BSE-ல் வர்த்தகமோ 200-250 கோடி. ஒரு பங்கு சந்தை வளர வர்த்தகம் முக்கியம். வர்த்தகம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் பங்குகளை எளிதாக வாங்கவோ, விற்கவோ முடியும். இதை Liquidity என்பார்கள். ஆக, liquidity இருந்தால்தான் நீங்கள் அந்த சந்தைக்கு போவீர்கள். உங்களை போன்ற பலர் சந்தைக்கு வந்தால்தான் liquidity பெருகும். Chicken or Egg பிராப்ளம்தான்.

NSE இதை அனாயசமாக சமாளித்தது. Screen based trading  புரோக்கர்களை ஈர்த்தது. எட்டே மாதத்தில் BSE-க்கு நிகரான வர்த்தகம், 18 மாதங்களில் BSE போல ஒன்றரை மடங்கு வர்த்தகம். கொஞ்சம் கொஞ்சமாக BSE  ஆதரவு புரோக்கர்கள் NSE வசம் வந்துவிட்டார்கள்.

சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பங்குகளை டிமாட்டாக (Demat) வைத்து கொள்ள, 96-ல் NSDL ஆரம்பிக்கப்பட்டது. அதே போல பங்கு வர்த்தகத்தில் default வராமல் இருக்க NSCCL ஆரம்பிக்கப்பட்டது. இவையிரண்டும் சேர்ந்து T+2 செட்டில்மெண்டுக்கு வழிவகுத்தது. (T+2 என்றால் நீங்கள் பங்குகள் வாங்கிய இரண்டு நாட்களில் உங்கள் டிமாட் அக்கௌண்டுக்கு பங்குகள் வந்துவிடும் என்று அர்த்தம்)

இவற்றுக்கெல்லாம் முன்பேயே 92ல் SEBI ஆரம்பிக்கப்பட்டு, பங்குச்சந்தைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தரப்பட்டது.

இவையனைத்தையும் செய்தது காங்கிரஸ்தான் என்பதை மறக்கக்கூடாது. காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

எதற்காக பழைய கதை என்றால், NSE ஆரம்பித்து 24 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இரவு நேரத்திலும் டிரைவேடிவ் வர்த்தகம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு வெற்றியடையும் என்று தெரியவில்லை.

காரணம், Cash Market எனப்படும் உண்மையான பங்குச்சந்தை இரவிலே இயங்காது. பங்குகளின் விலையை அடிப்படையாக வைத்துதான் டிரைவேடிவ் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆக, Cash market இல்லாது derivative market சிறக்காது.

இரவு பொழுதில் நிறைய பேர் வர்த்தகம் செய்யமாட்டார்கள். அதனால் கமிஷன் கட்டுபடியாகாது என்கிறார்கள் புரோக்கர்கள். எப்படியிருப்பினும் இது NSE-ன் புது முயற்சி…!

No comments:

Post a Comment