Wednesday 18 July 2018

Demonitisation Overtime Pay


டிமானிடைஸேஷன் (Demo) சமயத்தில் வங்கி ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் வேலை செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அத்தனை கூட்டத்தையும் சமாளித்து, மை வைப்பது, ஐடென்டிடி ஆதாரம் வாங்குவது என்று மத்திய அரசு செய்த அத்தனை கோமாளித்தனத்திற்கும் ஈடு கொடுத்தனர். வாடிக்கையாளர்களின் கோபத்தையும் அவர்களே எதிர்கொண்டனர்.

அதிக நேரம் வேலை செய்த அவர்கள் ஓவர்டைம் சம்பளம் கேட்டனர். நியாயமான கோரிக்கை…! அனைத்து வங்கிகளும் ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் கொடுத்ததா என்று தெரியவில்லை. கனரா வங்கியில் இந்த பிரச்சனை இன்னும் தொடர்வதாக தெரிகிறது. (படம் பார்க்கவும்)

கடந்த ஏப்ரல் 1, 2017 அன்று, SBI வங்கியுடன் அதன் subsidiary வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஹைதராபாத், மைசூர், ட்ரிவாங்கூர் மற்றும் பிகானிர் & ஜெய்ப்பூர் ஆகியவை இணைக்கப்பட்டன.

இதன்பின்னர், SBI வங்கி தனது ஊழியர்களுக்கு 17000-30000 ரூபாய் (ஊழியரின் நிலைகேற்ப) Demo ஓவர்டைம் சம்பளம் தந்தது. இப்போது இணைக்கப்பட்ட அந்த ஐந்து வங்கியை சேர்ந்த 70000 ஊழியர்களிடமிருந்தும் SBI ஓவர்டைம் காசை திருப்பி கேட்கிறது…!

Demo சமயத்தில் இந்த வங்கிகள் SBI-உடன் இணைக்கப்படவில்லை. இணைப்பு நடந்தபின்தான் Demo ஓவர்டைம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. “நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு மட்டும்தான் ஓவர்டைம் சம்பளம் வழங்கினோம். மற்ற ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் தந்திருக்க வேண்டியது பழைய நிர்வாகத்தின் பொறுப்பு” என்பது SBI வாதம்.

Demo ஓவர்டைம் சம்பளம் கொடுப்பது குறித்து பலகாலம் விவாதம் நடந்ததாக நினைவு. கனரா வங்கியில் இன்னும் பிரச்சனை இருக்கிறதல்லவா? அப்படி இருக்கும் பட்சத்தில் SBI வங்கியின் வாதம் சரியில்லை…!

பழைய வங்கிகளின் அனைத்து சொத்துக்களையும், கடன்களையும் SBI ஏற்றுக்கொண்டுதான் இந்த இணைப்பு நடந்துள்ளது. பழைய நிர்வாகத்தில் ஓவர்டைம் சம்பளம் குறித்து முடிவெடுக்காததோ, பாலன்ஸ் ஷீட்டில் நிதி ஒதுக்காததோ ஊழியர்கள் தவறில்லை. (இணைப்பு சமயத்தில் யூனியன்கள் இதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தன?) யூனியன் தவறிழைத்திருந்தாலும் ஊழியர்கள் உழைத்தது உண்மைதான்…. அதற்கு பணம் தரவேண்டியதும் நியாயம்தான்.

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளரையும், ஊழியரையும் திருப்திப்படுத்திதான் லாபம் ஈட்ட பார்க்கும். இந்த SBI வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களையும் சிரமப்படுத்துகிறது…. ஊழியர்களையும் சிரமப்படுத்துகிறது….! என்ன டிசைனோ?

No comments:

Post a Comment