Friday 13 July 2018

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு...!


வரிவிதிப்பு தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்குமல்லவா….? இது போன்ற வழக்குகளில், அப்பீல் போவதற்கான வரம்பை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 29600 நேரடி மற்றும் மறைமுக வரி சம்பந்தப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படும்.

இதனால், வழக்குகளில் கோரப்பட்ட 5600 கோடி ரூபாய் (Disputed Amount) அரசுக்கு வராது. இதை இழப்பு என்று சொல்லமுடியாது… ஆனாலும், அரசு விட்டு கொடுத்ததாய் எடுத்து கொள்ளலாம்.

முன்பொரு முறை GST காரணமாக புதிய வழக்குகள் நிறைய வந்து சேரும் என்று பதிவிட்டிருந்தேன். ஏற்கனவே குவிந்த வழக்குகளை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்துள்ளது. நல்ல விஷயம், மத்திய அரசிற்கு பாராட்டுகள்...!

இதற்கு முன்னதாகவும் விரைவாக assessment முடிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில், அதிகாரிகளின் performance appraisal முறைகளையும் அரசு மாற்றியமைத்திருந்தது.

அரசின் போக்கு இப்படி இருந்தாலும், அதிகாரிகளின் போக்கு மாறினாற் போல தெரியவில்லை.  கடந்த மே மாதம், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு GST return-களுக்கு இடையே 78 பைசா வித்தியாசம் இருந்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

GST குறித்த புரிதல் இன்னும் சிறு, குறு வியாபாரிகளுக்கு வரவில்லை… சின்ன சின்ன விஷயங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, பெனால்டி போடுவது போன்ற நடவடிக்கைகளிலிருந்து அதிகாரிகள் விலக வேண்டும். மத்திய அரசு இதற்கும் வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments:

Post a Comment