Monday 14 May 2018

Indian Banking - NPAs


கடந்த 3 வருடங்களில் வங்கி வாராக்கடன்கள் பல லட்சம் கோடிகள் அதிகரித்திருக்கின்றன. இது குறித்து படித்து தெரிந்து கொள்ளலாம் என்று போனதில் தலை சுற்றியதுதான் மிச்சம்....
பாஜக வெர்ஷன் – எல்லா வாராக்கடன்களும் காங்கிரஸ் காலத்தில் கொடுக்கப்பட்டது... அது எல்லாம் ஊழல்.... இப்போது நாங்கள் அனைத்து கடன்களையும் திரும்பி வசூலிக்க பார்க்கிறோம். கடன்களை வாராக்கடனாக கருதுவதற்கான நிபந்தனைகளை (NPA Norms) தீவிரமாக்கியிருக்கிறோம். அதன் காரணமாகவே வாராக்கடன்கள் அதிகரித்திருக்கின்றன.
பாஜக அல்லாதவர்கள் வெர்ஷன் – காங்கிரஸ் காலத்தில் வளர்ச்சியை கருதி கடன்கள் வழங்கப்பட்டன. பாஜகவின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக (முக்கியமாக பணமதிப்பிழப்பு) வர்த்தகம் பாதிக்கப்பட்டு கடன்கள் வாராக்கடன்களாயின.
பாஜகவிற்கு வேண்டியவர்களின் கடன்கள் restructure செய்யப்பட்டது. முக்கிய வர்த்தக குழுமங்களின் (அம்பானி, ஆதானி என்று படிக்கவும்) கடன் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. (RTI சட்டத்தின் கீழ் மனு போட்டும் விவரங்கள் மறுக்கப்பட்டுவிட்டன). இது பெரும் ஊழல்.
உண்மை இந்த இரண்டிற்கும் நடுவிலே உள்ளது. இது குறித்த தெளிவான, கட்சி சார்பில்லாத கட்டுரைகளை படித்திருந்தால், படித்தால் லிங்க் தாருங்கள். அறிவை வளர்த்து கொள்கிறேன். நட்பூக்களுக்கு நன்றி..! 

No comments:

Post a Comment