Tuesday 8 May 2018

கர்நாடகா சட்டசபை தேர்தல் - அருமையான தேர்தல்


கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 2560 வேட்பாளர்களின் விண்ணப்ப படிவங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். சுவாரஸ்யமான தகவல்கள்....
மொத்த வேட்பாளர்களில் 391 வேட்பாளர்கள் மீது (அதாவது 15%) கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகமாக, பாஜகவின் வேட்பாளர்களில் 37% பேர் மேல் கிரிமினல் வழக்குகள் உண்டு. மற்ற கட்சிகளும் சளைத்தவை அல்ல.... காங்கிரஸ் வேட்பாளர்களில் 27%, ஜனதா தள் (செக்யுலர்) வேட்பாளர்களில் 21% பேர் கிரிமினல் வழக்கு உடையவர்கள்தான். (இது அவர்களாக ஒப்புக்கொண்டுள்ள தகவல்.... மற்றவர்கள் தகவல்களை மறைத்திருக்கவும் வாய்ப்புண்டு)
கிட்டத்தட்ட 35% வாக்காளர்கள் (883 பேர்) கோடீஸ்வரர்கள். பணம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றாகி விட்ட நிலையில் 65% பேரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கூட இல்லை என்றால் என்னால் நம்பமுடியவில்லை...! என்ன ஆச்சர்யம்..! (வெள்ளையில் இருந்தால்தான் கணக்கு காட்டவேண்டும் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம்தானே..!)
309 பேர் PAN Number குறிப்பிடவில்லை. PAN Number குறிப்பிடவில்லையென்றால் நம்மை வங்கியில் எத்தனை கேள்விகள் கேட்கிறார்கள்? ஹ்ம்ம்ம்....!
இப்போதுதான் முக்கியமான விஷயம் வருகிறது.... 57% பேர் (1453) 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாக படித்தவர்கள். அதில் 102 பேருக்கு படிப்பறிவே கிடையாது.
கிரிமினல் கேஸ் இருந்தால் நம் நாட்டில் கான்ஸ்டபிளாக கூட ஆக முடியாது. ஆனால் அரசியல்வாதி ஆகலாம். சட்டத்தை வைத்து நிர்வாகம் செய்யும் அரசு அதிகாரிக்கு தனியாக படிப்பு, பரீட்சை எல்லாம் இருக்கிறது.... சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிக்கு படிப்பு, பரீட்சை எதுவும் கிடையாது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இதுவரையில் 152 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது. வோட்டுக்கு காசு வாங்கும் கலாச்சாரம் அங்கும் பரவிவிட்டது.
நல்ல மக்கள், நல்ல அரசியல்வாதிகள், நல்ல தேர்தல், நல்ல விதிமுறைகள்...! சபாஷ்...!

No comments:

Post a Comment