Tuesday 20 March 2018

Three Sector Hypothesis and Indian Economy



பொருளாதாரத்திலே, மூன்று செக்டார்கள் உண்டு. முதல் செக்டார் (Primary Sector), இயற்கை வளங்களை சார்ந்தது. விவசாயம், சுரங்கம், கால்நடை வளர்ப்பு போன்றவை. இரண்டாவது (Secondary Sector), தொழிற்சாலைகள் சார்ந்தவை. மூன்றாவது (Tertiary) சேவை சார்ந்தவை... உதா. ஹோட்டல்கள், வங்கிகள், வாணிபம், மென்பொருட்கள், ரியல் எஸ்டேட் போன்றவை. (தற்காலத்தில் மென்பொருள் போல அறிவு சார்ந்த வேலைகளை நான்காவது செக்டாராகவும் கருதுகிறார்கள்)

ஆரம்பத்தில், எந்த ஒரு நாட்டிலும் பிரைமரி செக்டாரே ஜி.டி.பியில் முக்கிய பங்கு வகிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது செக்டாருக்கும், பின்னர் மூன்றாவது செக்டாருக்கும் முக்கியத்துவம் வரும். அதாவது, அதிக வேலைவாய்ப்புகளும், ஜி.டி.பி வருவாயும் இரண்டாவது, மூன்றாவது செக்டாருக்கு சென்றுவிடும்.

நோபல் பரிசு பெற்ற பால் க்ருக்மேன் (Paul Krugman) என்பவர் இந்தியாவின் செக்டார் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சர்வீஸ் செக்டார் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது, தொழில்துறை செக்டார் வளரவில்லை.... தொழில்துறை செக்டாரில்தான் அதிக வேலைவாய்ப்பு வரும்... இந்தியாவின் தொழில்துறை வளராவிட்டால், வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதல் செக்டார்தான் இப்போதும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது (படத்தை பார்க்கவும்). இவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்து, நிறைய தொழிற்சாலைகளையும் ஆரம்பித்து அதில் வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதே க்ருக்மேனின் கருத்து.  
அதிலும் சிக்கல் இருக்கிறது.... டெக்னாலஜி (Automation என்று படிக்கவும்) வளர்ச்சியால் இப்போது தொழில்துறை செக்டாரிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் வருமா என்று க்ருக்மேன் சந்தேகம் எழுப்பி, இதுவே இந்தியாவின் சவாலாக இருக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

இந்தியாவில் எப்போதுமே தொழில்துறையை விட சேவை துறைதான் பெரிது. 1950லியே மூன்று செக்டார்களும் முறையே 59%, 13%, 28% ஜி.டி.பி. பங்களித்தன. 1990லே இது 35%, 24%, 41% சதவிகிதமாக மாறியது. அதாவது, விவசாயத்திலிருந்து நேரடியாக சேவைத்துறைக்கு வளர்ச்சி சென்றுவிட்டது. 90களில் நடைபெற்ற பொருளாதார கொள்கை மாற்றங்களுக்கு பிறகும், தொழில் துறையை விட சேவைத்துறையே வளர்ந்து வருகிறது. (15%, 31%, 54%)

அதாவது, இந்தியாவின் வளர்ச்சி, மற்ற நாடுகளை போல அல்லாது எல்லா காலத்திலும் (சோஷலிஸமோ, கேபிடலிஸமோ) வித்தியாசமாகத்தான் இருந்திருக்கிறது. ஆக, க்ருக்மேன் பொதுவாக மற்ற நாடுகளில் நடந்த மாற்றங்களை வைத்துக்கொண்டு இந்தியாவை கணிக்க பார்ப்பது சரியல்ல... க்ருக்மேன் இந்த பாயிண்டை மிஸ் செய்துவிட்டாரா என்று தெரியவில்லை.

ஆனால், அவரது இரண்டாவது எச்சரிக்கை என்னவோ உண்மை. டெக்னாலஜி மூலமாக வேலைவாய்ப்புகள் அடிபடபோகிறது. இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனை என்றாலும், இந்தியாவின் நிலை வேறு. இந்தியாவில்தான் அதிகமான வொர்க்கிங் பாப்புலேஷன் இருக்கிறது.... அதாவது, வேலைசெய்யும் வயதில் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு வேலை இல்லாவிட்டால் பல சமூக சிக்கல்கள் உண்டாகும்.

வேலை என்பது பணம் சம்பாதிப்பதற்கான விஷயம் மட்டுமல்ல, அது மனிதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் (positively engaging activity) விஷயமும் கூட. சமூகம், பொருளாதாரம் அனைத்தையும் டெக்னாலஜி பூதம் அடுத்த பத்தாண்டுகளில் வெகுவாக மாற்றப்போகிறது என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment