Monday 26 March 2018

Latest Developments


இரண்டு மிக முக்கிய நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன.

ஒன்று, ‘Fixed Term Employment’ அனைத்து தொழில் துறைகளுக்கும் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நிரந்தர வேலை என்று ஒன்று இனிமேல் இருக்காது, காண்ட்ராக்ட் வேலைகள் மட்டுமே இருக்கும், வேலைக்கு பாதுகாப்பு இருக்காது என்று தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றன.

இப்படி fixed term employment வந்ததில் தொழிலாளர்களுக்கு சில பலன்கள் இருக்கிறதென்றாலும், தொழிலாளர்கள் இதை வரவேற்கவில்லை. (எந்த நேரத்திலும் தொழிலாளி வேலையிலிருந்து தூக்கப்படலாம், notice pay கிடையாது) முன்பு வாஜ்பாய் இதே சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். அவர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் காங்கிரஸ் அரசு அந்த சட்டத்திருத்தத்தை நீக்கியது.

வழக்கம் போல நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமலேயே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கொண்டுவந்துள்ளது. விவாதம் வரக்கூடிய விஷயங்களில், பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருவது கவனிக்கவேண்டிய விஷயம். அதாவது, ஒரு விவாதத்தில் கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் தரும் நேர்மை அரசுக்கு இல்லை என்றே இதை பார்க்கவேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவில் 2ம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாடு முழுக்க தொழிலாளர் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது நிகழ்வு, வன்கொடுமை சட்டத்தின் விதிகளில் சுப்ரீம் கோர்ட் கொண்டு வந்துள்ள சில மாற்றங்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 90% குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை, பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன என்று காரணம் கூறி உடனடி கைது நடவடிக்கைகள் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மத்திய அரசாங்கம் இதற்கு என்ன விதமான மேல் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் இந்த இரண்டு மாற்றங்களும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு நல்ல தீனியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment