Wednesday 21 February 2018

Guilt Tax


நம்ம ஊரில் நியாயமாக வரி போட்டாலே, அதை கட்டுவதற்கு மூக்கால் அழுபவர்கள் உண்டு. ஆனால், லண்டனிலே அதிக வரி கட்டுவதற்கும் மக்கள் தயாராக உள்ளனர்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பணக்கார ஏரியா. அப்படிப்பட்ட ஏரியாவிலும் ஏழைகள் உண்டு. சமீபத்தில் கூட வீடில்லாமல் தெருவில் படுத்திருந்த ஒருவர் இறந்து போய்விட்டார். (இதையெல்லாம் அவர்கள் ஊரில் ரொம்ப சீரியஸாக எடுத்து கொள்கிறார்கள்)

இப்படி தங்கள் ஏரியாவில் இருக்கும் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயருவதற்காக, வெஸ்ட்மின்ஸ்டரில் இருக்கும் பணக்காரர்கள் City Council க்கு அதிக வரி கட்ட தாங்களாகவே முன்வந்திருக்கிறார்கள். அதாவது, தாங்கள் மட்டும் பணக்கார வாழ்க்கையை வாழ, மற்றவர்கள் ஏழ்மையில் வாடுவதை கண்டு வருந்தி, அதிக வரி கட்ட தயாராக இருக்கிறார்கள். அதனால், இதை guilt tax, அதாவது, குற்றவுணர்ச்சி வரி என்று அழைக்கிறார்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் இதை சமூக நன்கொடை (Community Contribution) என்றழைக்கிறது. 10 மில்லியன் பவுண்டு மதிப்பிற்கு மேல் சொத்து இருந்தால், அவர்களை நிதியுதவி செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த நிதியுதவி செய்யவேண்டியது கட்டாயமில்லை என்றாலும், 55% பணக்காரர்கள் புதிய வரிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

நல்லார் உளரேல் அவர் பொருட்டு மழை...!

No comments:

Post a Comment