Tuesday 27 February 2018

திரிபுரா தேர்தல் மறுவாக்குப்பதிவு


திரிபுரா சட்டசபை தேர்தலில் 191 (6%) VVPAT மெஷின்களும், 89 (5%) EVM மெஷின்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றும், 520 வாக்குச்சாவடிகளில் மெஷின்களை குறித்த குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது என்றும் தேர்தல் ஆணையரே கூறியுள்ளார்.

இதற்கிடையில், எந்த குற்றச்சாட்டும் எழாத 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையர் உத்தரவு போட்டிருக்கிறார். ஏன் மறுதேர்தல் என்பதற்கு எந்த காரணமும் சொல்லவில்லை. அதில் ஒன்று மாணிக் சர்க்கார் போட்டியிடும் தொகுதியை சேர்ந்ததாகும்.

சில வாக்குச்சாவடிகளில் வோட்டர் லிஸ்டில் இருப்பவர்கள் எண்ணிக்கையை விட அதிகமாகவே வோட்டுக்கள் பதிவும் ஆகியிருக்கின்றன. அங்கெல்லாம் மறு வாக்குப்பதிவு வைக்காமல், இந்த 6 வாக்குச்சாவடிகள் மட்டும் ஏனோ?

மேலே இருப்பவனுக்கே அனைத்தும் வெளிச்சம்….!

No comments:

Post a Comment