Tuesday 13 February 2018

GSTயும் வழக்குகளும்


GST - நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு அமலாகிவிட்டது. ஆனால், இன்னும் வர்த்தகர்களின் சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்ந்தபாடில்லை. வரித்துறை அதிகாரிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இருக்கும் புரிதல் குழப்பம், நீதிமன்றங்களில் வழக்காகத்தான் போய் முடியும்.

GST வரி அமலாக்கப்பட்டவுடன் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்... இது GST வரியை அமல்படுத்திய பல நாடுகளின் அனுபவம். நம் நாட்டிலும் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட புரிதல் காரணமாக வழக்குகள் அதிகமாகலாம். இந்திய பொருளாதாரத்தின் அளவை வைத்து பார்த்தால் GST குழப்பங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று KPMG கூறியுள்ளது.

இந்த விஷயத்தில் நம் நாட்டு சூழ்நிலை அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை. ஏற்கனவே நேரடி, மறைமுக விரிவிதிப்பு தொடர்பாக 2 லட்சம் வழக்குகள் பல நிலைகளில் தேங்கி கிடக்கின்றன (படத்தை பார்க்கவும்). இவற்றோடு GST குறித்த வழக்குகளும் அதிகமாக சேரும் வாய்ப்பு இருக்கிறது.
 



இது விஷயத்தில் வரித்துறை அதிகாரிகள் மேல்தான் அதிக தவறு இருப்பதாக தோன்றுகிறது. இது போன்ற வழக்குகளில் 65% வழக்குகள் வரி கட்டுபவர்களுக்கு சாதகமாகவே முடிகின்றன. இந்த சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, அதிகாரிகள் வீண் வழக்கு தொடுப்பது அதிகமாக இருக்கிறது.
 

இதற்காகவே வரித்துறை அதிகாரிகளின் Performance appraisal முறையை சென்ற வருடத்திலிருந்து அரசாங்கம் மாற்றியுள்ளது. அதாவது, நிறைய வரி வசூலித்தால் சிறந்த appraisal என்பது இல்லாமல், தரமான துரிதமான assessment, வரிகட்டுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் இருக்கும் தகராறுகளை தீர்ப்பது போன்ற அடிப்படையில் appraisal முறை மாறியுள்ளது.

நிதித்துறை மட்டும் வேகமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டுவந்தால் போதாது, இந்திய நீதித்துறையும் வேகமாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், நாட்டின் வர்த்தகம் பெருகாது வழக்குகள்தான் பெருகும்...!

No comments:

Post a Comment