Friday 23 February 2018

ஆசிரியர்கள் கையில் துப்பாக்கி?


அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் நாம் அனைவரும் அறிந்ததே…! கடந்த 14ம் தேதி ஃப்ளாரிடாவில் உள்ள MSD High School என்னும் பள்ளியில் ஜேக்கப் க்ரூஸ் என்னும் 19 வயது இளைஞன் (சிறுவன்?) நுழைந்து 17 மாணவர்களை சுட்டு தள்ளினான்.

க்ரூஸ் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்…. கறுப்பர்களை காரணமே இல்லாமல் வெறுப்பவன்…. துப்பாக்கிகளை நேசிப்பவன்….. சமூக வலைத்தளங்களில் அவனது தீவிரவாத கருத்துக்களுக்காக அரசாங்கத்தின் பார்வையிலே ஏற்கனவே இருப்பவன். அப்படியிருந்தும் எப்படியோ இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்திவிட்டான்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த முறை துப்பாக்கிகளுக்கு எதிராக போராடுபவர்கள் க்ரூஸின் தாக்குதலிலிருந்து தப்பித்த மாணவர்கள். “Never Again MSD” என்னும் இயக்கத்தை ஆரம்பித்து வலுவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க ரஷ்யாவும் களத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்க மக்களை இரண்டு குரூப்களாக பிரிக்க வலைதளங்களில் Automated BOT-கள் மூலமாக கருத்துகளை விதைத்து விடுகிறது. இது மூலமாக அமெரிக்க மக்களிடையே வெறுப்பை வளர்த்து வருகிறது. (இதே போல நெட் நியூட்ராலிட்டி விவாதங்களிலும் BOT-கள் மூலமாக கருத்துகளை பரவ செய்தனர். டெக்னாலஜி என்பது எப்போதுமே இருமுனை கத்திதான்…. அது வேறு கதை)

எப்போதெல்லாம் துப்பாக்கிகளுக்கு எதிரான கருத்து ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் NRA (National Rifle Association) தன் லாபியை தொடங்கிவிடும். அதிபர் ட்ரம்போ துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரிப்பவர். அவர் தேர்தல் பிரசாரத்திற்காக NRA மொத்தம் 30 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்தது.


அப்படிப்பட்ட ட்ரம்ப் வேறு என்ன முடிவெடுப்பார்…? பள்ளி குழந்தைகளை துப்பாக்கி சூடுகளிலிருந்து காப்பாற்ற, ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்கலாம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். நாளை ஏதாவது ஆசிரியரே மனநிலை தவறிப்போய் குழந்தைகளை கொன்றால்…? குழந்தைகளிடமும் துப்பாக்கி கொடுக்கலாம் என்பார். இவரையெல்லாம் அதிபராக வைத்துக்கொண்டு…?

மக்களுக்கு எதற்கு துப்பாக்கி? அமெரிக்கர்களுக்கு துப்பாக்கி ஒரு போதையாக உள்ளது…. கண்டிப்பாக மனநிலை சிகிச்சை தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment