Thursday 13 June 2019

இரவு உயிரிகள் (Nocturnal)


மனிதர்களுடைய நடமாட்டத்திற்கு அஞ்சி, பிற உயிரினங்கள், குறிப்பாக பாலூட்டிகள், தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறதாம்.

6 கண்டங்களில் 62 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடமாட்டம் காரணமாக, உயிரினங்கள் இரை தேடும் நேரத்தை மாற்றிக் கொள்வது, குறைந்த நேரமே இரை தேடுவது, வழக்கமாக தாங்கள் புழங்கும் இடத்தை மாற்றிக் கொள்வது என்று பலவிதங்களில் மாறி வருகின்றன.

சில உயிரினங்கள் மனிதர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக இரவு உயிரிகளாக (Nocturnal) மாறுகின்றனவாம்.

இதே போல வெயில் கொளுத்தினால் இந்தியாவில் மனிதர்களும் இரவு உயிரிகளாக மாற வேண்டியதுதான்.


No comments:

Post a Comment